Sunday, March 18, 2012

நான் வளர்கிறேனே


நான் வளர்கிறேனே, நண்பர்களே....
நமது ரோட்டரி மாவட்டம் 2980 பெருமையோடு சொல்கிறது.


கடந்த ஐந்து ஆண்டுகாளாக நமது வளர்ச்சி மிக அருமையாக இருக்கிறது. 2007, 2008, 2009 ஆண்டுகளில் சீராக இருந்த வளர்ச்சி 2010-ல் அசுர வேகம் எடுத்தது.  43 புதிய சங்கங்கள் 1385 உறுப்பினர்கள் என்று மிக நல்ல வளர்ச்சியை தந்தவர் முன்னாள் ஆளுனர் Rtn. கோவிந்தராஜ் அவர்கள். பின்னர் அடுத்த வருடம் இருந்த உறுப்பினர்களை தக்க வைத்துக் கொண்டதுடன் மேலும் 6 புதிய சங்கங்களுடன் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் நமது மாவட்டம். இந்த ஆண்டு 2011-12-ல் டிசம்பர் மாதம் வரையில் மூன்று சங்கங்களை இழந்தாலும் 538 உறுப்பினர்களோடு வளர்ச்சிப்பாதையில்தான் நாம். இதற்கு காரணமான அனைத்து நண்பர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.








YEAR 2007 2008 2009 2010 2011 2012
Total Rotarians 30th June 3732 4088 4337 5722 5975 6513
Total Clubs 30th June 97 102 107 150 156 153
District_Governor M.Natarajan S.Arulmozhi chelvan C.Sivagnaselvam N.Govndaraj Joseph Suresh Kumar N.Asoka



வளர்ச்சியின் முக்கியத்துவம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அதனால் கடந்த வருடங்கள் போல நாம் எப்போதும் உறுப்பினர்கள் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் கொள்ள வேண்டும். 


ஒவ்வொருவரும் உடன் இருக்கும் நண்பர் ஒருவரை தக்க வைத்துக் கொள்வதோடு ஒரு புதிய நண்பரையும் சங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.






வாருங்கள் நண்பர்களே ..வெற்றி என்றும் நம் பக்கம்..

இங்கேயும் என்னைப் பார்க்கலாம் 
Anbu FaceBook Pages

Sunday, March 4, 2012

நமது இலக்கு


இனிய நண்பர் உதவி ஆளுனர், மற்றும் சங்க தலைவர்களுக்கு,

இந்த ஆண்டு மிக முக்கிய பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்ற இருக்கிறீர்கள். நானும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். வழியில் உங்கள் உதவி தேவைப்படும். நீங்களும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சங்க உறுப்பினர்கள் வளர்ச்சியில் கவனம் கொண்டு குறைந்த பட்சம் பத்து சதவீதம் எட்ட வேண்டும் என்பது நமது மாவட்ட ஆளுனர் Rtn.Dr.பழனிவேலு (RID 2980) அவர்களின் விருப்பம். இந்த வளர்ச்சி குறைவானதாக தோன்றலாம். எப்பொழுதும் அதிக பட்ச இலக்கு ஒவ்வொரு சங்கத்தின் தனிப்பட்ட இலக்கு. 

சங்கத்தின் இலக்கினை இங்கே இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். வரும் ஆண்டின் தலைவர் பற்றிய தகவல்கள் முகவரி, அலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரியினையும் தெரிவித்தால் நாம் உடனுக்குடன் தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்.




நாம் மீண்டும் பேசுவோம். நன்றி.